Saturday, January 10, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 10

அன்று காலை ஏழுந்தவுடன் கீதா என்னை பாத்திரம் கழுவ அழைத்தாள். பாத்திரம் கழுவிக் கொண்டே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் நேற்று கடையில் என்னைப் பார்த்து சிரித்த காரணம் கேட்டேன். 

"இல்ல, நேத்து காலைல நீ என்னோட கிலிவேஐ்(cleavage) தெரியுது என்று சொன்ன... நியாபகம் இருக்கா உனக்கு?"

"ஆமாம் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ?"

"நேற்று நீ கடையில் அந்த பிங்க் பிரா போட்ட போது உனக்கும் கிலிவேஐ் தெரிந்தது. அந்த சிலிக்கான் பிரா பேட் வைத்தவுடன் இன்னும் அம்சமாய் இருந்தது. அதான் சிரிச்சேன்."

"நிஜமா நல்லா இருந்ததாடி? அப்படி காமிக்கலாமா? தப்பு இல்லை?"

"தப்பு என்று எதுவும் இல்லடி. எனக்கு அது புடிக்காது. அப்படி பப்ளிக்ல போகும் போது, எல்லா பசங்களும் பாப்பாங்க. அது ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்."

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா அம்மா வந்து கீதாவை தனியாக கூப்பிட்டு ஏதோ சொல்லிவிட்டு சென்றார். பின்பு கீதா கையில் சிலவற்றைக் கொண்டு வந்தாள்.

"அம்மா உனக்கு இந்த கிரீம் எல்லாம் போட்டு விட சொன்னாங்க.  ஏன் என்று எல்லாம் என்னைக் கேக்காதடி. எனக்கு தெரியாது."

"என்ன கிரீம் இது?"

"உடம்பில் உள்ள முடியை எடுக்க. இது போட்டதுக்கு அப்புறம் உன்னோட ஸ்கின் ரொம்ப மென்மையா இருக்கும். சூப்பரா இருக்கும்."

"சரி, அம்மா சொன்னா ஒரு காரணம் இருக்கும். எனக்கு போட்டு விடு"

"அதுக்குள்ள ஆசைய பாரு. போய் டிரஸ் கழட்டிட்டு, பேன்ட்டி மட்டும் போட்டுக்கிட்டு வா" என்றாள். நானும் அவள் சொன்னது போலவே செய்தேன்.

பின்பு அவள் வீட்(veet) எனப்படும் அந்த கிரீம் எடுத்து என் கை மற்றும் கால்களில் தடவினாள். என் நெஞ்சினிலும் தடவினாள். ஏற்கனவே எனக்கு இயற்கையாகவே உடம்பில் முடி இல்லாவிட்டாலும், இந்த கிரீம் நல்ல ஒரு மென்மையை தரும் என்றாள் கீதா.

 சிறிது நேரம் கழித்து கை கால்களை துடைத்தவுடன் என் மேனி பளப்பளவென்று பட்டு போல் மென்மையாக இருந்தது. கீதா சென்று என் அம்மாவை கூட்டிகிட்டு வந்தாள்.

அம்மா அப்போது வந்து என்னிடம் ஒரு உள்பாவாடை கொடுத்து கட்டிக்கச் சொன்னார். ஒரு பெண் குளிக்கும் போது கட்டும் முறையில் கட்டுமாறு கீதாவை எனக்கு உதவச் சொன்னார். நான் கீதா உதவியுடன் கட்டிக் கொண்டதும் என்னை சரியாக 10:30 மணிக்கு பின் பக்கம் வரச் சொன்னார். அப்போது தான் நல்ல நேரம் ஆரம்பமாம். எனக்கு ஒரே குழப்பம். இன்று நடக்கும் அனைத்தும் எனக்கு வியப்பாக இருந்தது.

"என்ன நடக்குது கீதா? என்ன ஆச்சு அம்மாவுக்கு இன்னக்கி?" கீதாவிடம் கேட்டேன்.

"எனக்கு மட்டும் என்ன தெரியும். பொறுத்திருந்து பாக்கலாம்"

இன்னும் அம்மா சொன்ன நேரத்துக்கு இன்னும் அரை மணிநேரம் இருப்பதால் , நான் என் அறையில், அந்த உள்பாவாடை கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். கீதா என்னுடன் இருந்தாள்.
இதோ மணி காலை 10:30 ஆகிவிட்டது.என்னை அழைத்து வரும்படி அம்மா கூப்பிட்டது எங்கள் காதில் விழுந்தது. நானும் கீதாவும் தோட்டத்துப் பக்கம் சென்றோம்.

அங்க அம்மாவுடன் எங்கள் வீட்டு வேலைகாரி செல்வி, பூர்ணிமா  மற்றும் அவளின் அம்மா இருந்தனர். சற்றுத் தள்ளி வேலைக்காரியின் மகள் சாந்தி என்னைப் போலவே உடம்பை மறைக்குமாறு உள்பாவாடை கட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். என்னனயும் அவள் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமரச் சொன்னார் பூர்ணிமாவின் அம்மா. எனக்கு ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்த்தேன்.

அம்மா அப்போதுதான் விளக்கமாய் சொன்னார்.  வேலைக்காரி எங்கள் வீட்டில் ஒரு அங்கம்தான். பல வீட்டில் வேலை செய்தாலும் எங்கள் மேல் ஒரு தனி அன்பு. அவர்களின் செலவுகளை என் அம்மாதான் பார்த்துக்கொள்வார்.

செல்வியின் மகள் சாந்தி 8ஆம் வகுப்பு படிக்கிறாள். நேற்று வயதுக்கு வந்துவிட்டாளாம். அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டுமென்பது செல்வியின் ஆசை. அதற்கு அம்மாவிடம் பணம் கேட்டிருக்கிறார். என் அம்மாவிற்கு தன்னோட பெண் அபிராமிக்கு இது மாதிரி மஞ்சள் நீராட்டு விழா நடத்தி பார்க்க முடியவில்லை என்று ஒரு ஏக்கம் இருந்ததாம். அதனால் எனக்கும் சாந்திக்கும் சேர்த்து ஒரே மஞ்சள் நீராட்டு விழாவாக கொண்டாட ஒரு யோசனை தோன்றியது. அதனால் இந்த ரகசிய ஏற்பாட்டினை செய்தார்.

எனக்கு காரணம் தெரிந்ததால், என்ன சொல்வது என்று தெரியாமல் எனக்கு அழுகை வந்து விட்டது. என் அம்மாவும் பூர்ணிமா அம்மாவும் என் அழுகையை நிப்பாட்ட முயன்றனர்.

"நல்ல நாள் அதுவுமா இப்படி அழுகாதடி. இன்னக்கி உனக்கு ஒரு முக்கியமான நாள். சந்தோசமா இரு" என்றார் என் அம்மா.

"இதுக்கே இப்படி அழுதா எப்படி.கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருஷன் வீட்டுக்கு போகும் பொது எப்படி அழுகப்போறியோ" என்று பூர்ணிமாவின் அம்மா கிண்டல் அடித்தார்.

வேலைக்கார அக்காவோ , "அப்போ வீட்டோட மாப்பிளை பார்த்து கட்டி வைக்கவேண்டியதுதான்" என்று அவர் பங்குக்கு பேசினார்.

எனக்கு வெட்கம் வந்து என் அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டேன்.

"உன் புருஷனை இப்படி கட்டிப்பிடு.. இப்போ உங்கம்மாவை விடு" என்று செல்வி அக்கா என்னை அழைத்துக்கொண்டு நாற்காலியில் அமரச் செய்தார்.

எனக்கு வெட்கம் கலந்த சந்தோசம் ஆட்கொண்டது. அந்தப் பெண் சாந்திக்கும் அப்படித் தான் இருக்கும் போல். நாங்கள் இருவரும் தலை தாழ்த்தி வெட்கத்துடன் அமர்ந்திருந்தோம்.


பின்பு எனக்கு என் அம்மாவும், சாந்திக்கு செல்வி அக்காவும் உடம்பு முழுவதும் மஞ்சள் தேய்த்தனர். பூர்ணிமாவும் கீதாவும் அம்மாவோடு சேர்ந்து கொண்டு என் கை மற்றும் கால்களில் மஞ்சள் தேய்த்தனர். எனக்கு வெட்கம் மட்டுமே வந்தாதால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.


சிறிது நேரம் கழித்து, எங்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி குளிப்படினார்கள். கீதா அவள் மட்டும் தனியாக எனக்கு மஞ்சள் நீராட்ட வேண்டும் என்று ஆசை பட்டதால் அவள் மட்டும் மீண்டும் ஒரு முறை தனியாக எனக்கு மஞ்சள் நீராட்டினாள்.


"தங்கச்சிக்கு அப்புறம் அக்கா வயசுக்கு வருவது இந்திய தொலைக்காட்சியில் இது தான் முதல் முறை, அதனால் நான் இதை மறக்க மாட்டேன்" என்று நகைச்சுவையுடன் பேசினாள். அம்மா சொன்னதால் என்னை அழைத்துக் கொண்டு கீதா அவள் அறைக்கு சென்றாள்.


"அம்மா உன்னை டிரஸ் மாத்திட்டு திரும்பி வர சொன்னாங்க. புது டிரஸ் எடுத்து வைத்திருக்காங்க" என்றாள் கீதா.

"அது எல்லாம் இருக்கட்டும். இதை எல்லாம் ஏன் இப்படி ரகசியமா வச்சீங்க? ஏன் முன்னாடி சொல்லவில்லை?"

"எனக்கே தெரியாதுடி. எல்லாம் அவுங்க முடிவு பண்ணி இரகசியமா பண்ணிட்டாங்க" என்று சொல்லிகொண்டிருந்த போது பூர்ணிமா உள்ளே வந்தாள்.

"என்னடி, சந்தோசமா உனக்கு? நான் தான் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னேன். அதன் அம்மா உங்ககிட்ட சொல்லவில்லை" காரணம் சொன்னாள் பூர்ணிமா.

"இப்போ உங்க அம்மவுக்கும் செல்வி அக்காவுக்கும் தெரிஞ்சி போச்சி என்னைப் பத்தி. என்ன நினைப்பாங்க என்னைப் பத்தி?"

"ஏன் இதுக்கு போய் கவலைப்படுற? எப்படியும் நீ ஒரு பெண்ணாய் வெளியே வரணும். நாலு பேரு பாப்பாங்க. அதனால நீ அதைப்பத்தி எல்லாம் கவலைப் படக்கூடாது. இப்போ அவுங்களுக்கு தெரியும் என்பதால் இன்னும் நீ சுதந்திரமா இருக்கலாம். நாங்க நிறைய பேரு உனக்கு சப்போர்ட் இப்போ" என்று அவள் சொன்னது உண்மை என்று தோன்றியது.

அப்புறம் நான் உடை அணிய ஆரம்பித்தேன். புதிதாய் வாங்கிய லேஸ் வைத்த புஷ்-அப் பிரா அணிந்த பின் சிலிகான் பிரா பேட் உள்ளே வைத்தேன். பின்பு அதன் கூட எடுத்த பேன்ட்டி அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளி வந்து இருவரிடமும் காமித்தேன். அப்போது அம்மா உள்ளே வந்தார்கள்.


முதன்முறையாக அம்மா என்னை உள்ளாடையில் பார்கிறார்கள். எனக்கு அது ஒரு மாதிரி கூச்சமாய் இருந்தது. அம்மாவுக்கும் அப்படித்தான் போல். என்னை இதுவரை ஒரு மகனாய் பார்த்து விட்டு , இப்போது ஒரு பெண்ணாய் அதுவும் பெண்கள் அணியும் உள்ளாடையில் பார்கிறார். அவர் அழுது விட்டார்.

பின்பு அவரே சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"நான் இப்படி உன்னை பிரா போட்டுக்கிட்டு, உண்மையான ஒரு பொண்ணு  வெட்கபடுகிற மாதிரி பார்ப்பேன்னு கனவிலும் நினைக்க வில்லை. நீ வெட்க படுறதை பாக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. இவ்ளோ நாள் எங்கடி போச்சி உனக்குள்ள இருந்த இந்த பெண்மை? இப்படி உன்னை இப்போது பார்த்து விட்டதால் உன்னை ஒரு பெண்ணாக தான் என் மனசு பார்க்கும் இனிமேல்" என்று சொல்லியபடி ஆடைகளை எடுத்துக்கொடுத்தார்.

அந்த பையில் பச்சை-நீளம் கலந்த புடவை, ரவிக்கை, கருப்பு உள்பாவாடை இருந்தது. அம்மா மற்றும் பூர்ணிமா உதவியுடன் ரவிக்கை அணிந்து கொண்டேன். அணிந்திருந்த பிராவிற்கு மேல் ரவிக்கை வைத்து கொஞ்சம் இழுத்து ரவிக்கையின் அந்த 5 ஹூக் மாட்டும் போது ஒரு பரவசத்தை உணர்ந்தேன். பின் உள்பாவாடை எடுத்து இடிப்பில் கட்டிக்கொண்டேன். அம்மா எனக்கு புடவை கட்டிவிட்டார்.

கையில் வளையல்கள், கழுத்தில் 1 பெரிய நெக்லஸ், 1 சிறிய நெக்லஸ், காலில் வெள்ளி கொலுசு அணிந்தேன். நெக்லஸ் அணிய கீதா உதவினாள். பின்பு நான் வாங்கிய ஜிமிக்கி அணியச் சொன்னார் அம்மா. ஒரு காதில் நான் மாட்டினேன். மற்றொரு காதில் கீதா மாட்டிவிட்டாள். தலையில் விக் அணிந்த பின், அதை அழகாய் வாரிவிட்டு, மல்லிகை பூ வைத்து விட்டார். முதல் முதலாய் இப்போது தான் புடவை அணிகிறேன்.

நடக்கும் போது காலில் இருந்த கொலுசு ஏற்படுத்தும் சத்தமும், தலை அசையும் போது, காதில் இருந்த ஜிமிக்கி என் மேல் உராயும் உணர்ச்சியும் என்னை ஏதோதோ பண்ணியது. பெண்மையின் சுகங்களை அப்போது தான் முழுவதுமாய் உணர்ந்தேன்.

"அபிராமி, உனக்கு இந்த புடவை புடிச்சிருக்கா?"

"ரொம்ப நல்ல இருக்கு அம்மா. எல்லாம் புதுசா இருக்கே.. எப்போ எடுத்தீங்க?"

"அதுவா, அன்னைக்கு நான் உங்களை கடையில் தனியா விட்டுட்டு போனேன்ல. நீங்க கூட கேட்டீங்க.. நான் அப்புறம் சொல்றேன் என்று சொன்னேன்.. உனக்கு இந்த புடவை வாங்கத்தான் வேற கடைக்கு போனேன். அப்புறம் டைலர் கிட்ட கீதா ப்ளௌஸ் அளவு கொடுத்து உனக்கு இந்த ப்ளௌஸ் வாங்கினேன்." என்று சொல்லி என்னை மறுபடியும் தோட்டத்து பக்கம் கூட்டிச் சென்றார்.


அங்கே சாந்தியும் புடவை மற்றும் நகை அணிந்து, அமர்ந்து இருந்தாள். நான் அவளருகில் அமர்ந்தேன். பின்பு அங்கிருந்த அணைத்து பெண்களும் எனக்கும் சாந்திக்கும் நெத்தியில் கும்குமம் வைத்தனர். நான் தலை குனிந்து பொறுமையாய் இருந்தேன்.

என் வாழ்வின் மிக முக்கியமான நாள் இது. இன்று தான் நான் உண்மையாய் வயதுக்கு வந்ததாய் அம்மா சொன்னார். இதோ எல்லாரும் சென்று விட்டார்கள். நான், அம்மா மற்றும் கீதா மட்டும் இருக்கிறோம் எங்கள் வீட்டில். முதன் முதலாய் அணிந்த இந்த புடவையை இன்று முழுவதும் கலட்டப் போவதில்லை.

உங்களுக்கும் புடவை பிடிக்கும்தானே?

No comments:

Post a Comment