Thursday, January 1, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 3

அபிராமி பிறந்தாள்

அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் தேவை இல்லாமல் பூர்ணிமாவை திட்டிவிட்டேன். அவள் எனகாகதான் சொன்னாள் என்று இப்போது தான் புரிகிறது. மறுநாள் காலை சென்று அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

எனக்கு அவளை ரொம்ப புடிக்கும். அவள் தான் என்னோட ஒரே ஒரு தோழி. வேறயாரும் எனக்கு நண்பர்கள் இல்லை. இரவு முழுவதும் யோசித்து பார்த்தபோது அவள் சொல்லுவது தான் ஒரே வழி என்று எனக்கு புரிந்தது. நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தோம். நான் அவளது ஐடியா-வுக்கு ஓகே சொல்ல போறேன்.

அனால் என்னை ஒரு பெண்ணாக நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை. இதனால் அந்த ஒரு இரவைக் களிப்பது ஒரு யுகம் போல் இருந்தது.

காலையில் முதல் வேலையாக பூரணி வீட்டுக்கு சென்றேன்.

அவள் என்னை பார்த்ததும் அழ தொடங்கிவிட்டாள். இப்படித்தான் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவாள்.

"ரொம்ப சாரிடா ஆனந்த். நேத்து நா அப்படி பேசி இருக்ககூடாது. எங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே காலேஜ்ல படிக்கமுடியாதோ என்ற வேகத்துல அப்படி பேசிட்டேன்."

"அடச்சீ, நான் தான் தப்பு பண்ணிட்டேன்.சாரி டி பூரணி."

"நான் சொன்ன ஐடியா உனக்கு புடிகலைன்னு எனக்கு புரியுது. அதை அப்படியே மறந்துடுடா" என்று சொல்லிக்கொண்ட கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"இல்லை... இல்லை.. நீ சொன்னதுதான் சரியானது"

"என்னடா? உனக்கு அது சம்மதமா?"

"ஆமாம்.எனக்கு ஒகே. நான் உனக்காக இதை கூட பண்ணமாட்டேனா?"

"உன்னமையாகவா?"

"உன்மேல சத்தியமா சொல்றேன்" என்று உண்மையாக சத்தியம் செய்தேன்.

"ஹையா.. ஜாலி ஜாலி.. நம்ம ரெண்டு பேரும் அப்போ சேர்ந்து காலேஜ் போகலாம். அப்புறம் வேலைக்கும் போகலாம்."

"ஆனா எப்படி இதை பண்றது" என்றேன் நான்.

"நம்ம ஸ்கூல் எக்ஸாம் முடிய இன்னும் 1 மாசம் டைம் இருக்கு.அப்புறம் காலேஜ் அட்மிசன் முடிய 2 மாசம் ஆகும். காலேஜ் திறக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அதுக்குள்ள நீ எல்லாத்தையும் கத்துக்கலாம் டா."

"நீ சொன்ன கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்டி. நீ தான் எல்லாத்தையும் பிளான் பண்ணனும்".

"அதை எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ கவலைப்படாத. எனக்காக நீ இவ்ளோ பண்ணும்போது நான் இதைகூடவா பண்ணமாட்டேன்?" ஆறுதலாய் பேசினாள் கீதா.

"சரி..இப்போ இனிமேல். நான் என்ன என்ன பண்ணனும்? கொஞ்சம் தெளிவா சொல்லு"

"அப்படி கேளுடா.. அய்யோ..இல்ல இல்ல.. இனிமேல் நீ எனக்கு டா இல்லை, டீ தான்" என்று சொல்லி சிரித்தாள்.

அவள் சொன்னது எனக்கு முதலில் புரியவில்லை என்றாலும் பின்னர் எனக்கு புரிந்தது. "டீ" என்று கூப்பிட்டு இப்போதிருந்தே பழகினால் தான் பின்னாடி பெண்கள் மத்தியில் இருக்கம் போது வித்தியாசமாய் தெரியாது என்று காரணமும் சொன்னாள்.

"சரிடீ ஆனந்தி" என்று அவளே எனக்கு பெயர் வைத்து கூப்பிட்டு, "உனக்கு இந்த பெயர் புடிச்சிருக்கா?" என்று கேட்டாள்.

"நல்லா தான் இருக்கு. ஆனா வேற பெயர் வைக்கலாம் எனக்கு" என்றேன்.

"அப்போ நீ ஒரு பெயர் முடிவு பண்ணுடி"

"எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருந்தானு உனக்கு தெரியும்ல. குழந்தையாய் இருக்கும்போதே அவ இறந்துட்டா. நான் அவ பெயர வச்சிக்குறேன். அபிராமி என்னும் அபி"

"ஹ்ம்ம். எனக்கு தெரியும்டீ. இந்த பெயர் இன்னும் நல்லா இருக்கு. ரொம்ப பென்மைத்தனமாக I mean girly ah இருக்கு. எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடி.

"இப்பொழுது முதல் என் பெயர் அபிராமி."

 "எனக்கு இப்போதாண்டி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நாம இப்போ கேர்ள் பிரண்ட்ஸ் ஆகிறோம்."

"எனக்கும் சந்தோசம்தான். இது எல்லாம் வெறும் 4 வருஷம்தானே? வாழ்க்கை முழுசா என்னால ஒரு பொண்ணு மாதிரி இருக்க முடியாது"

"ஆமாம்டிஅபிராமி. நான்கு வருடம்தான். அனால் யாரும் கண்டுபுடிக்க முடியாதபடி நீ ஒரு பொண்ணா இருந்தாதான் நமக்கு நல்லது."

"பூரணி... அபிராமினு என் பெயரை நீ சொல்லும்போதே எனக்கு உடம்பு சிளிற்குதுடி. ஏன் அப்படி?"

"பெண்மையின் சின்ன சின்ன சந்தோசங்களில் இதுவும் ஒன்று. இன்னும் நிறைய இருக்குடி, அபிராமி."

"இந்த அனுபவம் எல்லாம் எனக்கு புதுசா இருக்கு."

"இன்னும் போக போக நிறைய புதுசா தெரியும்.. ஒரு பொண்ண இருக்குறது ரொம்ப சந்தோஷமான விஷயம்னு உனக்கே புரியும்."

"பாக்கலாம்.. அடுத்து என்ன பண்ணனும்?"

"நீ முதலில் ஒரு பெண்ணாக மனதளவில் தயாராகணும். நீ இனிமேல் ஒரு ஆம்பிள்ளை இல்லை. நீ ஒரு பொண்ணுன்னு உன்னோட உள்மனசுல பதியனும். எல்லா விசயங்களையும் ஒரு பொண்ணு எப்படி பார்பாளோ, அப்படி தான் நீயும் இனிமேல் பாக்கணும். சின்ன சின்ன விஷயங்கள்கூட ஒரு பெண்ணுக்கு நிறைய சந்தோசம் இருக்கு."

 "எப்படிஅதையெல்லாம் தெரிஞ்சிகுறது?"

"முன்னாடி மாதிரி இல்லாமல், பெண்கள் பற்றிய எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்து. பெண்களை பார்த்து, அவர்கள் என்ன என்ன பண்றாங்களோ அதை மனதில் பதியவை. பெண்கள்கூட அதிகநேரம் செலவுசெய். உன்னோட வீட்லேயே அம்மாவும், தங்கச்சியும் இருக்காங்க. பெண்கள் விஷயங்கள் எதாவது அவர்கள் பேசினால் நீயும் சேர்ந்துகொள். அவர்கள் உடுத்தும் ஆடைகளை நல்லா கவனி. என்ன என்ன உள்ளாடைகள் போடுறாங்கன்னு பாரு. இது எல்லாம் உனக்கு உதவும்"

"நான் எப்படி என்னோட அம்மா, தங்கச்சி உள்ளாடைகளை கவனிக்குறது? அது தப்பு இல்ல?"

 "நீயும் ஒரு பெண் என்பதை எப்போதும் மறக்காத. நீ ஒரு பெண்ணாக அவர்களை பார்க்குறது எந்த தப்பும் இல்ல. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணோட டிரஸ் பத்தி யோசிக்கிறது ரொம்ப இயல்பான ஒன்னு."

"சரிடி.. நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும் எப்பவுமே."

"ஹ்ம்ம்..இப்போ பள்ளி விடுமுறை என்பதால் டெய்லி என் வீட்டுக்கு வந்துடு. நாம ரெண்டு பெரும் பெண் தோழிகளாய் நேரத்தை செலவளிக்கலாம். உனக்கு நிறைய சொல்லித்தரேன். அம்மாவும் அப்பாவும் வேளைக்கு போவதால் யாரும் இருக்க மாட்டாங்க."

"நல்ல ஐடியா. டெய்லி நாம ஒன்னா படிக்கபோறோம் என்று சொல்லிடு வந்துடுறேன் உன் வீட்டுக்கு."

"கண்டிப்பா வாடி. எங்க இப்போ உன்னபத்தி சொல்லு பாப்போம்.."

"என் பெயர் அபிராமி. எல்லோரும் என்னை அபி என்று செல்லமாக கூப்பிடலாம். நான் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. நானும் பூர்ணிமாவும் பெண் தோழிகள். என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து மூன்று பெண்கள் உள்ளனர்."

"சூப்பர்டி அபிராமி.. பெண்கள் உலகத்துக்கு நான் உன்னை வரவேற்கிறேன். இன்றுமுதல் ஒரு பெண்ணாய் உன் வாழ்க்கையை ஆரம்பிக்க போகிறாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள்." - என்று சிரித்தபடி வாழ்த்துச் சொன்னால் பூரணி.

1 comment: