இரவில் நடு தூக்கத்தில் எழுந்தேன். அதற்கு அப்புறம் தூக்கம் வரவில்லை. நாளை வெளியில் செல்லும்போது என் கூந்தல் அழகை மாற்ற வேண்டும். நேற்று படித்த மங்கையர் மலர் புத்தகத்தில் இருந்த சில டிசைன் மாதிரி எனக்கு கூந்தல் முடி வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். காலையில் அம்மாவிடமும் , கீதாவிடமும் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு பலவற்றை யோசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது விடிந்தது.
காலையில் பல் விலக்கிவிட்டு கீழே வந்தேன். இப்போதெல்லாம் நான் இரவில் நைட்டி தான் அணிகிறேன். நானும் கீதாவும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது டிவியில் விஸ்பர் பேட் விளம்பரம் வந்தது.
"கீதா, நான் இப்போ ஒரு பொண்ணு மாதிரி எல்லாம் பண்ணுறேன். இது மட்டும் ஏன் இல்லை?"
"இதுவா? விஸ்பர் பேட் பத்தி சொல்றியா?"
"ஆமா"
"சரி சரி, நான் உனக்கு இன்னக்கி நைட் எடுத்து தரேன்."
"ஓகே டி. நான் சொல்ல மறந்துட்டேன். எனக்கு நேத்து கனவு வந்ததுடி. உனக்கு கல்யாணம் நடக்குற மாதிரி."
"நல்ல விஷயம், தான்", என்று குறும்பாய் சிரித்தாள். "அப்புறம் சொல்லு.."
"அதுமட்டும் இல்லை கீதா. அம்மா நேத்து சொன்ன மாதிரி எனக்கும் உனக்கும் ஒரே டைம், ஒரே மாப்பிள்ளை. நம்ம ரெண்டு பேருக்கும் தாலி கட்டறமாதிரி கனவுடி." என்று எனக்கு தூக்கம் போனதைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.
"என்னங்கடி, எதோ கல்யாணம், தாலி என்று காதுல விழுது. என்ன விஷயம்?" என்று அம்மாவின் குரல் கேட்டது. அப்போது அம்மா எங்களுக்காக கையில் தேநீர் எடுத்துக் கொண்டுவந்தார்.
கீதா என் கனவு பற்றி அம்மாவிடம் சொன்னாள்.
"நான் உங்க ரெண்டு பெயரையும் ரொம்ப சின்னப் போன்னுங்கனு நினைச்சேன். இப்போ தான் புரியுது, நீங்க வயசுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு. என் தப்புப்தான்." என்றார் அம்மா. பின்பு அவரே தொடந்தார்.
"கீதா, நீ யாராவது பையனை லவ் கிவ் பண்ணுறியா?"
"அதெல்லாம் இல்லமா."
"நீ, அபிராமி? யாராவது பையன் உன் மனசுல இருக்கானா டி?"
"அய்யோயோ.. அது எல்லாம் இல்லை. உங்களுக்கே தெரியும், நான் இப்போ பொண்ணுங்க மாதிரி டிரஸ் மட்டும்தான் பண்ணிக்கிறேன்."
"ஹ்ம்ம்.. எனக்கு நீயும் என் பொண்ணுதான். அதான் அவளை கேட்டமாதிரி உன்னையும் என்னை அறியாமல் கேட்டுட்டேன். சரி. நீங்க காதலிக்கிறது எனக்கு ப்ரோப்ளம் இல்ல. பட் எல்லை மீறக்கூடாது. படிப்பு முக்கியம்". அம்மா அக்கறையுடன் சொன்னார்.
நாங்கள் முன்பே முடிவு செய்தது போல நான், கீதா மற்றும் பூர்ணிமா, மூவரும் ஷாப்பிங் போக கிளம்பிவிட்டோம். அம்மா எங்களை பார்த்து செலவு செய்யச் சொன்னார்கள். ஆடைகள் பல ஏற்கனவே நிறைய வாங்கிவிட்டதால் இந்த முறை மற்றவைக்கு செலவு செய்யச் சொல்லி அனுப்பினார்.
அம்மா அனுமதியுடன் இன்று ஒரு பெண்ணாக வெளியில் போகபோகிறேன். அதனால் கீதாவையும் பூர்ணிமாவையும் எனக்கு உதவும்படி சொன்னார். நான் முன்பு ஒருமுறை வெளியில் சென்றது தெரியாது.
நானும் கீதாவும் எனக்கு எந்த டிரஸ் போட என்று பேசிக்கொண்டிருந்தபோது, பூரணி ஒரு யோசனை சொன்னாள்.
பூர்ணிமாவின் மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவள் அணிந்த பாவாடை தாவணியை அவள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்தாள். மஞ்சளும் சிகப்பும் கலந்த ஆடை அது. அவள் யோசனையும் அந்த பாவாடை தாவணியும் எனக்கு பிடித்தால் நான் சம்மதித்தேன்.
நான் ஒரு சிகப்பு பிரா மட்டும் பேன்ட்டி அணிந்து, என் அறைக்குள் அவர்கள் இருவரையும் அழைத்தேன். இப்பொது எனக்கு இப்படி மற்ற பெண்கள் முன் இப்படி இருக்க பழக்கம் ஆகிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.
"பரவா இல்லை, நீயே சொந்தமா பிரா போட பழகிட்ட. ஹ்ம்ம்" என்றாள் கீதா.
என்னை ஒருமுறை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, ஒரு பக்கம் திரும்பி இருந்த என் பிரா ஸ்ட்ராப் அட்ஜஸ்ட் செய்துவிட்டாள் பூரணி. ஏற்கனவே பிராவினுள் ஸ்லிப்ஸ் வைத்து இருந்ததால், ப்ளௌஸ் அணிந்த பின், என் மார்பகம் ஒரு அழகு தந்தது. இருவர் உதவியுடன் ஆடை அணிந்து தயாரானேன். பூரணி ஏற்கனவே தயாராகி இருந்ததால் கீதா மட்டும் கிளம்ப வேண்டும் இனி.
இதோ நாங்கள் இப்போது தயார். இந்த முறை மூவரும் மாநகர பேருந்தில் செல்வதாக உத்தேசம். மகளிர் பேருந்து எதுவும் இல்லாததால் கூடம் இல்லாத ஒரு பேருந்துக்காக காத்திருந்து ஏறினோம். நான் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று கட்டளை.
எனக்கு பிடித்த சில கூந்தல் விக் வாங்கி விட்டு, அருகில் இருந்த மல்டிப்ளெக்ஸ் கடைக்கு சென்றோம். கீதா சில விளையாட்டு போட்டிக்கு வெளி ஊர் செல்வதால், சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.
பின்னர் ஐஸ் கிரீம் சாப்பிட சென்றோம். நான் மெய் மறந்து ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொது பூரணி என் காலை உதைத்தால் மேஜையின் கீழ். எனக்கு காரணம் புரியாததால் நான் அதை கண்டு கொள்ள வில்லை. என் அருகில் இருந்த கீதா என் காதருகில் வந்து விஷயத்தை சொன்னாள். பின்பு அவளே என் தாவணி சரி செய்து விட்டாள். ப்ளௌஸ் விட்டு வெளியே வந்த பிரா ஸ்ட்ராப் நானே சரி செய்து கொண்டேன்.
என் தாவணி விலகி போயிருந்ததால், என் மார்பகம் சிறிது தெரிந்து இருக்கிறது போலும். எனக்கு அருகில் இருந்த ஒரு ஆண் என்னை கண்ணால் விழுங்கி கொண்டிருந்தான். என் பிரா ஸ்ட்ராப் வேறு அவன் கண்ணை உறுத்தி இருக்கும். இதை நினைக்கும் பொது என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. என்னை அறியாமல் அழத்துடங்கி விட்டேன்.
காரணம் புரியாமல் கீதா , பூர்ணிமா இருவரும் திகைத்தனர். என்னை பெண்கள் கழிவறைக்கு அழைத்து சென்று காரணம் கேட்டனர். நான் காரணம் சொன்னபோது இருவரும் சிரித்து விட்டனர்.
"ஐயோ அபி, இது எல்லாம் பொண்ணுங்க வாழ்க்கைல சாதாரணம். இதுக் எல்லாமா அழுவாங்க? நம்ப தான் உசாரா இருக்கனும் டி." என்றாள் பூரணி.
கீதா என் கண்ணை துடைத்து விட்டு மேக்கப் சரிசெய்து விட்டாள். இருந்தும் நான் ஒரு மாதிரி தான் இருந்தேன். என்னை சந்தோஷ படுத்த, இருவரும் என்னை காலணிகள் கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்றவுடன், என்னை அரியம் எனது பெண்ணுணர்வு வெளி வந்தது. எனக்குள் ஒரு சந்தேகம். நான் ஏன் இப்படி ஒரு நிஜமான பெண்ணை மாதிரி சந்தோசப் படுகிறேன்? நிஜத்தில் நான் ஒரு ஆண் தானே.. இப்படி பல குழப்பம் என் மனதில்.
இறுதியில் எனக்கு ஒரு ஹை ஹீல்ஸ் வாங்கிக் கொண்டு வீடு வந்தோம்.
எனக்குள் இருந்த அந்த குழப்பம் மீண்டும் வந்தது.
நான் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் ? நான் நிஜமாக ஒரு பெண்போல் ஏன் நடந்து கொள்கிறேன்? என் வாழ்கை என்னவாகும் கல்லூரிக்குப் பின்?
தூக்கம் வரவில்லை, என் எதிர்காலத்தை நினைத்து. மனது சோகமானது. அப்போது என் கண்ணில் பட்டது புதியாய் வாங்கிய ஹை ஹீல்ஸ்.
இதோ மீண்டும் மனதில் சந்தோசம் அதை போட்டு கொஞ்சம் தூரம் என் அறையில் நடந்து பழகிய போது.
No comments:
Post a Comment